பெங்களூரு: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான எச்.ஏ.எல். நிறுவனம் பெங்களூரு ஏர்போர்ட் சாலையில் உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 40 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்து நேற்று முன்தினம் திறக்கப்பட்டு தொழிலாளர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் நேற்று காலை 9.30 மணியளவில் தொழிற்சாலையின் போர்ஜ் அண்ட் பவுண்ட்ரி பிரிவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக 8 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.