சென்னை: அந்தமானில் சிக்கித்தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழக முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். தனி விமானத்திலோ அல்லது படகிலோ தமிழகம் வருவதற்கு அனுமதிக்க வேண்டும் என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதேபோல் அண்டை நாடுகள் மற்றும் மும்பையில் சிக்கியுள்ள தமிழர்களையும் மீட்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.