சென்னை: காவிரி மேலாண்மை ஆணையத்தை நீர்வளத் துறையின் கீழ் கொண்டு வந்ததற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் ஜீவாதார உரிமையை ஆணிவேரோடு பிடுங்கி எரியும் கருணையற்ற செயல் எனவும் தெரிவித்துள்ளார். முதல்வர் உடனடியாக அமைச்சரவை கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.