×

சர்ச்சை கருத்து வெளியிட்டதால் பாஜ எம்.பி. ஹெக்டே டிவிட்டர் கணக்கு முடக்கம்

கார்வார்: பாஜ எம்.பி. அனந்த்குமார் ஹெக்டேயின் டிவிட்டர் கணக்கை  அந்நிறுவனம் லாக் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   முன்னாள்  மத்திய அமைச்சரும், பாஜ எம்.பி.யுமான அனந்த்குமார் ஹெக்டே 2016ம் ஆண்டு  தனது பெயரில் டிவிட்டரில் கணக்கு தொடங்கினார். இது வரை 74,300 ஆதரவாளர்கள்  உள்ளனர். சமீபத்தில் கொரோனா தொற்று நாட்டில் பரவத் தொடங்கியதன் காரணம்  குறித்து பலரும் பலவிதமாக கருத்துக் கூறி வருகின்றனர். அதன்படி, நாட்டில்  கொரோனா வைரஸ் பரவல் காரணம் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி என எம்.பி.  அனந்த்குமார் ஹெக்டே தொடர்ந்து டிவிட்டரில் பதிவிட்டு வந்தார்.

ஒரு  குறிப்பிட்ட இனத்தினரை இழிவுப்படுத்தும் விதமாக டிவிட்டரில் தொடர்ந்து  விமர்சனம் செய்து  பதிவிடுவது என்பது டிவிட்டர் நிறுவனத்தின் சட்ட  திட்டங்களுக்கு எதிரானது எனக்குறிப்பிட்டுள்ள அந்த நிறுவனம் இதே காரணத்தை  வலியுறுத்தி எம்.பி., அனந்த்குமார் ஹெக்டேவின் டிவிட்டர் கணக்கு பக்கம்  முடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  டிவிட்டர் நிறுவனத்தின்  நடவடிக்கை குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் புகார் அனந்த்குமார் ஹெக்டே கூறினார்.


Tags : Hegde ,Baja MP , BJP MP Hegde, Twitter
× RELATED அரசியல் சாசனத்தை மாற்றுவதே பாஜ...