சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் நேற்று மாலை வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறுகையில், “தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பாதிக்கும் எதையும் செய்யக்கூடாது என்கிறார் பிரதமர். ஆனால் மத்திய, மாநில அரசுகள் தனது ஊழியர்களின் அகவிலைப்படி ஏற்றத்தையும், ஈட்டிய விடுப்பையும் முடக்குகின்றன. தொழில் முனைவோரையும், தொழிலாளரையும் பாதுகாப்பதில் தெளிவான முடிவெடுக்க வேண்டும் பால்கனி அரசுகள்” என்று தெரிவித்துள்ளார்.