×

மாஸ்க், சானிடைசர்களுக்கு ஜிஎஸ்டி ரத்து கோரிய வழக்கில் நோட்டீஸ்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் சூளைமேட்டை சேர்ந்த வக்கீல் எஸ்.ஸ்டாலின் ராஜா என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: ‘கொரோனா பரவல் முழுவதுமாக தடுக்கப்படும்வரை முகக்கவசம் மற்றும் சானிடைசர்களுக்கு ஜிஎஸ்டி வரி வசூலிக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சத்தியநாராயணன், நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று  விசாரணைக்கு வந்தது. மனுவை, விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் மத்திய அரசு 2 வாரங்களில் பதில் தருமாறு உத்தரவிட்டு வழக்கை  தள்ளி வைத்தனர்.


Tags : cancellation ,sanitizers , Mask, Sanitizers, GST Cancellation, Notices
× RELATED ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தபோது...