நாகை: நாகை மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு சீல் வைக்கப்பட்ட 13 இடங்களில் பொரவச்சேரி, திருக்களாச்சேரியில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். பொரவச்சேரி, திருக்களாச்சேரியில் நாளை முதல் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறக்கப்படும். நாகை மாவட்டத்தில் கடந்த 14 நாட்களாக யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று இல்லை எனவும் கூறினார்.