×

சென்னையில் 10.18 லட்சம் லிட்டர் கிருமி நாசினி மூலம் கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது: சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னையில் 10.18 லட்சம் லிட்டர் கிருமி நாசினி மூலம் கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்று  சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் தினமும் 25,000 தெருக்கள் மற்றும் சாலைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார். குறிப்பாக  கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஒரு நாளைக்கு இருமுறை கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது என தெரிவித்தார்.


Tags : Corporation of Chennai ,Chennai , Chennai, Disinfectant, Corona, Chennai Corporation
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...