சென்னை: கொரோனா தடுப்பு குறித்து சென்னையில் 4வது நாளாக தனியார் தொண்டு நிறுவனங்களுடன் மத்தியக் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. தொண்டு நிறுவனங்கள் செய்யும் உதவிகள், அவர்களுக்கான ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடக்கிறது. இதில் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.