லண்டன்: கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று முதல் பிரதமர் அலுவல் பணியை கவனிக்க தொடங்கி உள்ளார். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் லண்டனில் உள்ள புனித தாமஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தீவிர சிகிச்சைக்கு பின் குணமடைந்து ஒரு வாரத்துக்கு முன் வீடு திரும்பிய அவர் ஓய்வில் இருந்தார். இந்நிலையில், நேற்று முதல் அவர் அலுவல் பணியைத் தொடங்கினார். இதற்கு முன்னர், கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியுறவுத்துறை அமைச்சர் டோமினிக் ராப் உடன் அலுவல் பணி குறித்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர் மூன்று மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.