×

கொரோனா நிவாரணத்துக்கு 1.30 கோடி நிதியை வித்தியாசமாக வழங்கும் விஜய் தேவரகொண்டா

சென்னை: கொரோனா நிவாரணத்துக்கு 1.30 கோடி நிதியை வித்தியாசமான முறையில் வழங்க உள்ளார் நடிகர் விஜய் தேவரகொண்டா. தெலுங்கில் பல படங்களில் நடித்தவர் விஜய் தேவரகொண்டா. இவர் கொரோனா நிவாரண நிதியாக 1.30 கோடியை அறிவித்துள்ளார். அந்த தொகையை அவர் முதல்வர் நிவாரண நிதிக்கோ, பிரதமர் நிவாரண நிதிக்கோ வழங்கவில்லை. தனது அறக்கட்டளை சார்பில் தொடங்கப்பட்டுள்ள வெப்சைட்டில் ஏழைகள், பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், ஊருக்கு செல்ல முடியாத வெளியூர் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் பதிவு செய்ய வேண்டும். அவர்களுக்கு அறக்கட்டளை சார்பில் நிதி வழங்கப்படும் என்று விஜய் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறும்போது, ‘இந்த திட்டத்துக்கு மிடில் கிளாஸ் நிதி என்று பெயர் வைத்துள்ளேன். பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மக்கள் பயன் பெற வேண்டும் என்பதே இதன் நோக்கம்’ என்றார்.


Tags : Vijay Deverakonda , Vijay Deverakonda,Corona
× RELATED விஜய் தேவரகொண்டா ஜோடியாகும் திவ்யன்ஷா