×

புழல் பகுதியில் கொரோனா விழிப்புணர்வு: நீங்கள் வெளியே வந்தால் நான் உள்ளே வருவேன்...

புழல்: நீங்கள் வீட்டைவிட்டு வெளியே வந்ததால் நான் உள்ளே வருவேன் என்று கொரோனா சொல்வது போல் விழிப்புணர்வு பேனர் வைத்துள்ளனர். சென்னை புழல் ஊராட்சி ஒன்றியம் புள்ளிலைன் ஊராட்சிக்கு உட்பட்ட புள்ளி லைன் புதுநகர், பாலாஜி கார்டன், புதுநகர் ரங்கா கார்டன், சாந்தி காலனி, குப்பா மணி தோப்பு, பாப்பாரமேடு மற்றும் பாயசம் பாக்கம் உள்பட பல பகுதிகளில் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதையொட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் முக்கியமான சந்திப்புகளில் சென்னை காவல்துறை மற்றும் செங்குன்றம் வருவாய்த்துறை, புழல் ஊராட்சி ஒன்றியம் சார்பில், கொரோனா விழிப்புணர்வு ஓவியம் மற்றும் வைரஸ் மாதிரி பொம்மைகள் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் முக்கிய சந்திப்புகளில் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் தமிழ்ச்செல்வி ரமேஷ் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு பேனர் வைத்துள்ளனர்.

Tags : The Suffering Area , Awakening, corona awakening
× RELATED நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார்...