சென்னை: கொரோனா தடுப்பு குறித்து ஐஏஎஸ் அதிகாரிகளுடன் நாளை காலை 10 மணிக்கு முதல்வர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறவிருக்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.