நெல்லை: நெல்லை மாவட்டம் களக்காடு அருகே விபத்தில் நண்பர்கள் உயிரிழந்த சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கிளிண்டன், பசுபதியை மர்ம நபர்கள் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்ததாக புகார் எழுந்துள்ளது. மர்ம நபர்களை கைது செய்ய கோரி உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.