காந்திநகர்: குஜராத்தில் மேலும் 230 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் குஜராத் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,301-ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று கொரோனாவால் 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 155ஆக அதிகரித்துள்ளது.