புதுடெல்லி: கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால், வீட்டை விட்டு வெளியே வராத இந்தியர்கள் தங்களின் பொழுதுபோக்கிற்கு இணைய தொடர்பை அதிகரித்துள்ளனர். அந்த இணைய தொடர்பில் அதிகம் பார்ப்பது ஆபாச வீடியோக்களே என்பது போர்ன் ஹப் நடத்திய ஆய்வில் அம்பலமானது. இளைஞர்களை அதிகம் பொழுதுபோக்கும் இந்த ஆபாச வீடியோக்களை பார்ப்பவர்களில் உலக அளவில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளது. கடந்த மாதத்தில் ஒப்பிடுகையில் 95 சதவீதம் பார்வையாளர்களின் வரத்து அதிகரித்துள்ளதாக அதன் தகவல் தெரிவிக்கிறது. கொரோனா ஊரடங்கால் தங்கள் வாடிக்கையாளர்களை மேலும் குஷிப்படுத்த பிரீமியம் இணைப்பை தளர்த்தி அனைத்தையும் இலவசமாக பார்க்க சில இணைய தளங்கள் அனுமதித்துள்ளது. ‘போர்ன்ஹப்’ உள்ளிட்ட 827 ஆபாச இணையதளங்கள் மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.