×

விண்ணில் இருந்து எரிந்தபடியே கடலில் விழுந்த மர்ம பொருள்: மரக்காணம் அருகே பரபரப்பு

மரக்காணம்: விண்ணில் இருந்து எரிந்தபடியே கடலில் விழுந்த மர்ம பொருளால் மரக்காணம் அருகே பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சிக்கு உட்பட்டது எக்கியர்குப்பம் மீனவ பகுதி.   நேற்று முன்தினம் இரவு அப்பகுதி மீனவர்கள் கடற்கரையோரம் அமர்ந்திருந்துள்ளனர். அப்போது விண்ணில் இருந்து ஒரு மர்ம பொருள் கண்ணை பிரகாசிக்கும் வகையில் அதிக வெளிச்சத்துடன் எரிந்து கொண்டே கடலை நோக்கி வந்துள்ளது. இந்த அதிசய காட்சியை கண்ட மீனவ பகுதியை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்று திரண்டு வேடிக்கை பார்த்துள்ளனர்.

விண்ணில் இருந்து எரிந்து கொண்டே வந்த மர்ம பொருள் சுமார் 10 நிமிடம் கழித்து கடலில் விழுந்துள்ளது. எரிந்தபடியே கடலில் விழுந்த மர்ம பொருள் எரிகல்லா அல்லது விண்ணில் ஏவப்பட்டுள்ள ராக்கெட்டுகளில் இருந்து உடைந்து விழுந்த உதிரி பாகமா என்பது தெரியவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால் 144 தடை உத்தரவு காரணமாக அதிகாரிகள் யாரும் சம்பவ பகுதிக்கு வரவில்லை. அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தால் மட்டுமே கடலில் விழுந்த மர்ம பொருள் என்னவென்று தெரியவரும்.

Tags : sea ,sky ,Stirring , Astronomy, Sea, Mystery,markanam
× RELATED அந்தமான் அருகே மிதமான நிலநடுக்கம்!