×

மாணவனை தாக்கி செல்போன் பறிப்பு

அண்ணாநகர்: கோயம்பேட்டில் நடந்து சென்ற மாணவனை கல்லால் தாக்கி செல்போன் பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (19), மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரில் பி.காம் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர், நேற்று நெற்குன்றம் பகுதியில் உள்ள கடையில் பொருட்கள் வாங்குவதற்காக நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மர்மநபர்கள், இவரை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அதற்கு ராஜேஷ், என்னிடம் பணம் இல்லை என்று கூறியதால், ஆத்திரமடைந்த அவர்கள் அருகில் இருந்த கல்லை எடுத்து ராஜேஷ் தலையில் தாக்கினர்.

இதில், அவரது தலை மற்றும்  வலது கண் புருவத்தின் கீழ் காயம் ஏற்பட்டது. உடனே மர்ம நபர்கள் அவர் கையில் வைத்திருந்த விலை மதிப்புள்ள செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், ராஜேஷை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ராஜேஷ் கொடுத்த புகாரின் பேரில், கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags : Student attacks cell phone , Student ,attacks, cell phone
× RELATED மீனம்பாக்கம் விமான நிலையத்தில்...