திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.
திருவண்ணாமலையில் இன்று காலை திடீரென கருமேகங்கள் சூழ இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கருமேகங்கள் சூழ்ந்ததால் பகலிலும் இரவு போல காட்சியளித்தது. சாலையில் சென்ற ஒரு சில வாகனங்களும் முகப்பு விளக்கை எரிய விட்டவாறு சென்றன. கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று காலை பெய்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.