×

குளிர்பானத்தில் விஷத்தை கலந்து 2 மகள்கள் கொலை: கொடூர தாய் கைது

மணப்பாறை,:  திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சமுத்திரம் காந்திநகரை சேர்ந்தவர் சாந்தமீனா (40). இவரது கணவர் கனகராஜ் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இவர்களுக்கு லோகநாதன் (14) என்ற மகனும், கோகிலா (13) மற்றும் லலிதா (11) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். கணவனை இழந்த சாந்தமீனா தனது கொழுந்தன்கள் ரவிச்சந்திரன் (37), சரவணன் (34), பரமேஸ்வரன்(31) ஆகியோருடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 19ம் தேதி தனது பாக்கெட்டில் இருந்த ரூ.2ஆயிரம் காணவில்லை என ரவிச்சந்திரன் குடும்பத்தினரை சத்தம் போட்டுள்ளார். இதனால், தனது மகள்களின் நோட்டு புத்தகங்களை சாந்தமீனா எடுத்து பார்த்த போது கோகிலாவின் நோட்டில் ரூ.2 ஆயிரம் இருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த சாந்தமீனா, கடந்த 19ம் தேதி மாலை குளிர்பானம் வாங்கி வந்து அதில் விஷத்தை கலந்து கோகிலா மற்றும் லலிதாவுக்கு கொடுத்துள்ளார்.மறுநாள் 20ம் தேதி காலை இருவருக்கும் மயக்கம் வந்துள்ளது. இதனையடுத்து எலி பேஸ்ட்டால் பல்துலக்கியதில் மயக்கம் வந்ததாக கூறி தனது மகள்கள் இருவரையும் திருச்சி அரசு மருத்துவமனையில் சாந்த மீனா சேர்த்தார். இந்நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி கோகிலாவும், மாலையில் லலிதாவும் இறந்தனர். சாந்தமீனாவின் நடவடிக்கை குறித்து சந்தேகமடைந்த மணப்பாறை  போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துதீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், எவ்வளவோ அறிவுரை கூறி மகள்களை வளர்த்த போதும் திருட்டு குற்றத்தில் ஈடுபட்டது என் நெஞ்சை உறுத்தியதால் மகள்கள் இருவருக்கும் குளிர்பானத்தில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்து விட்டதாக சாந்த மீனா வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து மணப்பாறை போலீசார் கொலை வழக்குப்பதிந்து சாந்தமீனாவை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். சமுத்திரத்தில் உள்ள உயர் நிலைப்பள்ளியில் கோகிலா 8ம் வகுப்பும், லலிதா 5ம் வகுப்பும் படித்து வந்தனர். இந்த சம்பவம் மணப்பாறை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : daughters , Mother arrested for cold drink, poisoning, murder of 2 daughters
× RELATED 22 வேட்பாளர்கள் ஆர்ஜேடி அறிவிப்பு: லாலுவின் 2 மகள்களுக்கும் சீட்