சென்னை: தமிழகத்தில் இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்குவதாக தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார். ரமலான் நோன்பு சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், குவைத் உள்ளிட்ட பல நாடுகளில் நேற்று தொடங்கியது. இதனை தொடர்ந்து நேற்று மாலை பிறை தெரிந்ததாக தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இஸ்லாமியர்கள் வீட்டுக்குள் இருந்தபடியே நோன்பை கடைபிடிக்க உள்ளனர்.