சென்னை: சென்னையில் வரும் ஞாயிறு முதல் புதன் வரை மளிகை, இறைச்சி கடைகள், பேக்கரிகள் இயங்க மாநகராட்சி தடை விதித்துள்ளது. அனைத்து மண்டலங்களிலும் தீவிரமாக கண்காணிக்க அதிகாரிகளுக்கும் பறக்கும் படைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தரவை மீறி கடைகள் திறந்தால் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.