சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மருத்துவர்களுக்கு உணவில்லை, மக்களுக்கு உதவி சேரவில்லை என உண்மையை சொல்வது தவறா? என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். தவறுகளை சரி செய்யாமல், உண்மையை சொன்னதற்கு சிறையில் அடைப்பது தான் சர்வாதிகாரம். மேலும் ஜனநாயகத்தின் 4வது தூணான பத்திரிக்கையை முடக்காதீர்கள், கைதானவரை விடுவியுங்கள் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.