×

புலிக்கு அடுத்து 2 பூனைகளுக்கு கொரோனா

கொரோனா தொற்று மனிதரிடம் இருந்து மனிதருக்கு மட்டுமே பரவக் கூடியது என்றும் மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கு பரவாது என்றும் கூறப்பட்டு வரும் நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் இரண்டு வளர்ப்புப் பூனைகளுக்கு, வைரஸ் தொற்று உறுதியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நியூயார்க்கின்  இரு வேறு இடங்களில் பூனைகளுக்கு சுவாசப் பிரச்னை இருந்துள்ளது. இவற்றுக்கு கொரோனா தொற்று வீட்டில் இருந்தவர்களிடம் இருந்தோ அல்லது  பக்கத்து வீட்டாரிடம் இருந்தோ பரவி இருக்கக்கூடும். அவற்று்க்கு சிகிச்சை தரப்படுகிறது,’ என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்காவில் புலி ஒன்றுக்கு கொரோனா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


Tags : Corona , Corona, cats ,tiger
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...