×

பிற மாவட்ட மக்களை அனுமதிக்க கூடாது: போலீசாருக்கு எஸ்பி உத்தரவு

திருவள்ளூர்: மற்ற மாவட்டங்களை சேர்ந்த மக்களை, திருவள்ளூர் மாவட்டத்துக்குள் அனுமதிக்க கூடாது என, போலீசாருக்கு எஸ்பி அரவிந்தன் உத்தரவிட்டுள்ளார். கொரோனா தாக்கம், பல மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் நாளுக்குநாள் அதிகரிக்கிறது. இந்த வேளையில் பிற மாவட்டங்களை சேர்ந்த மக்களை, திருவள்ளூர் மாவட்டத்துக்குள் நுழைய அனுமதிக்க கூடாது என போலீசாருக்கு, எஸ்பி அரவிந்தன் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், மற்ற மாவட்டங்களை சேர்ந்த மக்கள் நடந்தோ, வாகனங்களிலோ திருவள்ளூர் மாவட்டத்துக்குள் நுழைய அனுமதிக்க கூடாது. சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்ல அனுமதிக்க கூடாது. தொழிலாளர்களையும் அழைத்து செல்ல கூடாது. மற்ற மாவட்டங்களில் இருந்து, திருவள்ளூர் மாவட்டம் வரும் ஆம்புலன்ஸ்களையும் சோதனை செய்ய வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றனர்.



Tags : district residents ,SP , Other district residents, police, SP Aravindan
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்