×

உடும்பை வேட்டையாடி சாப்பிட்டு டிக்டாக்கில் பதிவு: 6 பேர் கைது

மணப்பாறை:  திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பாலக்குறிச்சி அருகே உள்ள சோலையம்மாபட்டியை சேர்ந்தவர்கள் பொன்னர் (26), சூர்யா (22), லோகநாதன் (23), ரஞ்சித்குமார் ( 24), செல்வகுமார் (25), சரவணன் (24). இவர்கள், பாலக்குறிச்சி வனப்பகுதிக்கு சென்று உடும்பை வேட்டையாடினர்.


பின்னர் அந்த உடும்பை அறுத்து சமைத்து சாப்பிட்டு அதை டிக்டாக்கில் பதிவிட்டுள்ளனர். இதை பலரும் பார்வையிட்டு கண்டித்துள்ளனர். இந்த பதிவு வனத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து திருச்சி மாவட்ட வன அதிகாரி சுஜாதா உத்தரவின்பேரில் உதவி வன பாதுகாவலர் நாகைய்யா மற்றும் வனத்துறையினர் நேற்று முன்தினம் இரவு 6 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : 6 people,arrested , eating , hunting
× RELATED சென்னை புளியந்தோப்பு அருகே...