×

பேராவூரணி அருகே தீப்பற்றி எரிந்த வீட்டில் தவித்த மாற்றுத்திறனாளி குழந்தை மீட்பு

பேராவூரணி: பேரா வூரணி அருகே சமையல் செய்தபோது குடிசை வீடு தீக்கிரையானது. வீட்டிற்குள் இருந்த மாற்றுத்திறனாளி குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டார். தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே செங் கமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சத்யா (35). கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு இவரது மனைவி ராஜேஸ்வரி சமையல் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கூரையில் தீப்பற்றியது. தீ மளமளவென பரவியதால் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்த மேலும் தீ பரவா மல் அணைத் தனர்.

இந்த விபத்தில் ஒரு மாற்றுத் திறனாளி குழந்தை உட்பட 3 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். தீவிபத்தில் வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் சாம்பலானது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்தை நேற்று பார்வையிட்ட வட் டார மருத்துவ அலுவலர் டாக்டர் சவுந்தரராஜன் தீயினால் சாம்பலான குடிசை வீட்டை தமது சொந்த செலவில் கட்டிக்கொடுப்பதாக கூறியதால் வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

Tags : Peravurani ,home , Gentleman, Disabled Child, Rescue
× RELATED பேராவூரணி அருகே 70 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு