சென்னை: கொரோனாவை அனைவரும் எதிர்த்து வரும் நிலையில் பாஜக வெறுப்பு அரசியல் செய்கிறது என்று சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நாடு முழுவதும் தன்னார்வலர்கள் உணவு வழங்குவது நெகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர் கூறியுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.7500 வழங்க வேண்டும் என்று சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.