டெல்லியில் விமான போக்குவரத்து துறை அமைச்சக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதிப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், கொரோனாவால் பாதித்துள்ள ஊழியருக்கு விமானப் போக்குவரத்து அமைச்சகம் துணை நிற்கிறது.
அவருக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த ஊழியர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட ஊழியர் விரைவில் குணமடைய வாழ்த்துகள்,’ என்று கூறியுள்ளார்.