டெல்லி: மருத்துவ பணியாளர்கள் பாதுகாப்புக்காக அவசர சட்டம் கொண்டுவரப்படும்; குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு அவசர சட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் மருத்துவ பணியாளர்களை தாக்கினால் 6 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.