வாஷிங்டனில் உள்ள அவரது வீட்டின் முன் காவல் மற்றும் தீயணைப்பு உள்ளிட்ட அனைத்துத்துறை உயரதிகாரிகளின் வாகனங்களும் அணிவகுத்து சென்று உற்சாகப்படுத்தினர். இந்தியாவில் பல மருத்துவமனைகளில் கொரோனா வைரசால் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய டாக்டர்களை தாக்கி வரக்கூடிய சம்பவமும் நடைபெற்று வருகிறது. சென்னையில் ஆந்திராவை சேர்ந்த டாக்டர் மற்றும் சென்னையைச் சேர்ந்த டாக்டர் கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில் அவர்கள் சடலத்தை புதைக்கவும், எரிக்கவும் விடாமல் அங்குள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி ஊழியர்களை காயப்படுத்தி வருகின்றனர். கொரோனா சிகிச்சை அளிக்கக்கூடிய டாக்டர்களை கவுரவப்படுத்தாவிட்டாலும், அவர்களுக்கு உரிய மதிப்பும், மரியாதையும் வழங்குவதோடு அரசு உரிய பாதுகாப்பு ஏற்படுத்தி தர வேண்டும் என டாக்டர்கள் கூறி வருகின்றனர்.