×

புஸ்ஸூ... புஸ்ஸூன்னா... விட்டுடுவோமா? அதுதான் அறுத்து ‘சுக்கா’ போட்டுட்டோம்: ராஜநாகத்தை கொன்று விருந்து சமைத்த 4 பேருக்கு போலீஸ் வலை

இட்டாநகர்: ராஜநாகத்தை கொன்று விருந்து சமைத்த 4 ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். வடகிழக்கு மாநிலங்களில் நாய்க்கறி சர்வசாதாரணம். சில இடங்களில் பூச்சிகளையும் வறுத்து சாப்பிடுவது வழக்கமாக உள்ளது. சீனாவுக்கு அருகில் உள்ளதால், அவர்களின் தோஷம் இவர்களையும் பற்றிக் கொண்டுள்ளது. இந்த வகையில், அருணாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ உலா வருகிறது. அதில், உள்ள 4 பேர் கும்பல், ஒரு நீளமான ராஜ நாகத்தை கொன்று தங்கள் தோளில் வைத்துள்ளனர்.

அத்துடன் அவர்கள் பேசுகையில், ‘‘மலைப்பகுதிக்கு சென்று ராஜநாகத்தை வேட்டையாடினோம். இப்போது மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் எங்களுக்கு சுவையான உணவும் இறைச்சியும் கிடைக்கவில்லை. அதனால் பாம்பை கொன்றோம்’’ என்று கூறுகின்றனர். அதைத்தொடர்ந்து, ராஜநாகத்தை வாழை இலை மீது வைக்கும் அவர்கள் பாம்புக்கறி விருந்துக்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம் என்று சிரிக்கின்றனர். இதையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்படி இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அவர்களை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Tags : Dinner ,royal family , Pussu ,Pussunna ,leave? Four people , royal family , cooked dinner
× RELATED அறிஞர் அண்ணா நினைவு தினம் ரங்கநாத...