×

தா.பழூர் காரைக்குறிச்சி கோயிலில் சிவலிங்கத்தின் மேல் சூரிய ஒளி படும் அபூர்வ காட்சி

தா.பழூர்: தா.பழூர் அருகே காரைக்குறிச்சி பசுபதீஸ்வரர் கோவிலில் லிங்கத்தின் மேல் சூரிய ஒளி படும் அபூர்வ காட்சி நிகழ்ந்தது. அரியலூர் மாவட்டம் தா.பழூரை அடுத்த காரைக்குறிச்சி கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர்காலத்தில் கட்டப்பட்ட சவுந்தரநாயகி அம்பாள் சமேத பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 5ம் தேதி முதல்10ம் தேதி வரை லிங்கத்தின் மேல் சூரிய ஒளி படும் அபூர்வ நிகழ்வு நடைபெறும். தமிழ்மாதத்தில் சித்திரை மாதம் தொடக்கம் என்பதால் இம்மாதத்தில் சூரியபகவான் ஈசனை வழிபடுவதாக ஐதீகம். அதன்படி நேற்று காலை சூரிய உதயத்தின்போது அதிலிருந்து பிரதிபலிக்கப்பட்ட ஒளிக்கதிரானது நேரிடையாக லிங்கத்தின் மீது பட்டு பொன்னொளியில் ஒளிர்ந்தது. இந்தநிகழ்வு சித்திரை 10ம் தேதி வரை நீடிக்கும் என்று கோவில் வழிப்பாட்டு குழுவினர் தெரிவித்தனர்.

அப்போது லிங்கத்தின் மேல் சூரிய ஒளி படும் அபூர்வகாட்சி சூரிய உதயத்திற்கு முன்னதாக கோயிலுக்கு வந்து சூரிய ஒளியோடு இறைவனை தரிசிப்பது அபூர்வமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும்.வருடத்தில் இரண்டு மாதங்களில் இந்த நிகழ்வு நடைபெறும் என்றும் தற்போது 144 தடை உத்தரவு பிறப்பித்து இருப்பதால் பொதுமக்கள் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்பதால் அதிகமாக பொதுமக்கள் கோவிலுக்கு வழிபட வரவில்லை.வீட்டிலேயே இறைவனை நினைத்து வழிபட்டனர்.இறுப்பினும் சிலர் சமூக இடைவெளி பின்பற்றி வழிபாடு செய்து சென்றனர்.

Tags : Pallur Karaikurichi ,Shivalinga ,Thapoor Karaikurichi Temple ,Sivalingam ,Sunshine , Thapoor Karaikurichi temple, Sivalingam, Sunshine
× RELATED திரிமூர்த்தி