×

இளம்பிள்ளை அருகே முதியோர்களுக்கு உணவு வழங்க சிறுமி நிதி உதவி: உண்டியல் சேமிப்பு பணம் ரூ2440ஐ வழங்கினார்

இளம்பிள்ளை: இளம்பிள்ளை அருகே ஊரடங்கால் முடங்கிக் கிடக்கும் முதியோர்களுக்கு உணவு வழங்குவதற்காக, சிறுமி ஒருவர் தனது உண்டியலில் சேர்த்து வைத்திருந்த ரூ2440 தொகையை வழங்கினார். நாடு முழுவதும் கொரோனா எதிரொலியாக, வரும் மே 3ம் தேதி வரை தடை உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கால் ஆதரவற்ற முதியோர்கள், உணவுக்காக வெளியில் எங்கும் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இவர்களுக்கு தன்னார்வலர்கள் உணவு வழங்கி வருகின்றனர்.

மேலும், இடங்கணசாலை பகுதியை சேர்ந்த நண்பர்கள் குழு சார்பில், தினந்தோறும் அங்குள்ள முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், கே.கே.நகர் மேற்கு செக்கார வட்டத்தை சேர்ந்த அருள்குமார் மகள் தனுஷியா(6) என்ற சிறுமி, உண்டியலில் சேமித்து வைத்திருந்த ரூ2440ஐ வயதான முதியோர்களுக்கு உணவு வழங்க பயன்படுத்திக் கொள்ளுமாறு, நண்பர்கள் குழுவினரிடம் வழங்கினார். இதையடுத்து அந்த சிறுமியை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

Tags : Ilampillai Ilampillai , Financial assistance for young, old, child, young
× RELATED சென்னை வண்ணாரப்பேட்டையில் மனைவியை கொன்றுவிட்டு கணவர் தற்கொலை முயற்சி