×

2 பட்டாசு ஆலைகளுக்கு சீல்

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி, புதுத்தெருவை சேர்ந்த முருகனுக்கு சொந்தமான  பட்டாசு ஆலை சிவகாசி அருகே வெற்றிலையூரணியில் உள்ளது. அங்கு அரசின் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடைபெற்றுள்ளது. இதுபோன்று சிவகாசி அருகே அனுப்பன்குளத்தில் கனிமுத்துக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. அங்கும் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடைபெற்றது. அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து 2 பட்டாசு ஆலைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.


Tags : 2 Fireworks factories ,sealed
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...