×

பறிமுதல் தள்ளுவண்டி விடுவிக்க லஞ்சம்: சப்-இன்ஸ்பெக்டர்

வேலூர்: வேலூர் சத்துவாச்சாரி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறப்பு எஸ்ஐ சுகுமார் தலைமையிலான போலீசார் விதிமீறியதாக பழம், காய்கறிகள் விற்பனை செய்யும் தள்ளு வண்டியை பறிமுதல் செய்துள்ளனர்.
இதையடுத்து போலீஸ் நிலையம் சென்று இந்த வண்டியின் உரிமையாளர் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து  கேட்டுள்ளார். அப்போது எஸ்எஸ்ஐ சுகுமார், ஏட்டு மணிமேகலை ஆகியோர் ‘2,500 கொடுத்தால் தான் வாகனத்தை விடுவிக்க முடியும்’ என்று கூறியுள்ளனர்.

அதற்கு தள்ளுவண்டி கடைக்காரர், ‘நான் இன்ஸ்பெக்டரிடம் புகார் கொடுப்பேன்’ என்றாராம். அப்போது, ‘பணம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே வாகனத்தை வழங்க வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் தான் கூறினார். யாரிடம் புகார் கொடுத்தாலும் எதுவும் செய்ய முடியாது’ என்று போலீசார் கூறினார்களாம். இதுகுறித்து கடைக்காரர் டிஐஜி அலுவலகத்தில் புகார் தெரிவித்தார். இதையடுத்து சிறப்பு எஸ்ஐ சுகுமார், ஏட்டு மணிமேகலை ஆகியோரை சஸ்பெண்ட் செய்து எஸ்பி பிரவேஷ்குமார் நேற்று உத்தரவிட்டார்.   


Tags : Sub-Inspector , Sub-Inspector
× RELATED ஒரு கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது