×

டாக்டர்கள் உடல் நலத்தில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்: டி.டி.வி வேண்டுகோள்

சென்னை: அமமுக பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்ட அறிக்கை:கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவ பணியாளர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுவருவது கவலை அளிக்கிறது. பாதுகாப்பு உடைகள் போதுமான அளவுக்கு இருப்பதாக சுகாதாரத் துறை செயலாளர் பலமுறை சொன்னார். ஆனால் அனைத்து பரிசோதனை மற்றும் சிகிச்சை மையப் பணியாளர்கள் அனைவருக்கும் போய் சேரும் வகையில் அவை பகிர்ந்து அளிக்கப்பட்டனவா என்பது சந்தேகமாக இருக்கிறது. கொரோனா பெருந்தொற்று என்னும் ஆபத்து நிறைந்த நோயிலிருந்து மக்களைக் காக்கும் பணியில் உள்ள மருத்துவப் பணியாளர்களின் உடல் நலத்தைப் பேணுவதில் கூடுதல் கவனம் செலுத்த  வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.



Tags : Government ,DDV ,doctors , Government , pay extra attention, doctors' health, DDV request
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...