×

விடுமுறையின்றி வேலை பார்க்கும் போலீசார்: நாங்களும் மனுசங்கத்தான்.. லீவு கொடுங்க.... மன உளைச்சலில் குமுறல்

திருச்சி: தமிழகத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட போலீசார் உள்ளனர். தற்போது போக்குவரத்து, குற்றப்பிரிவு உள்பட அனைத்து பிரிவு போலீசாரும் கொரோனா தொற்று ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு 8 மணி நேரம் பணி 3 ஷிப்ட் முறையில் ஒதுக்கப்படுகிறது. இவ்வாறு தொடர்ந்து ஒரு வாரம் பணிபுரிய வேண்டும். பின்னர் ஒரு வாரம் அவர்களுக்கு விடுமுறை என்ற திட்டத்தை டிஜிபி திரிபாதி அமல்படுத்தியுள்ளார். புதன் முதல் செவ்வாய் வரை ஒரு வாரம் என குறிப்பிடப்பட்டு பணி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த 2 வாரமாக பணியில் உள்ள மாநகர் மாவட்ட போலீசார் விடுமுறை எடுத்து வருகின்றனர். ஆனால் தற்போது வரை விடுமுறை இல்லாமல் வேலை பார்ப்பதாக ஜீயபுரம் காவல் நிலைய போலீசார் குமுறி வருகின்றனர். மேலும் நாங்களும் மனுஷங்கள் தானே, எங்களுக்கு விடுமுறை கிடையாதா என்ற மனவேதனையுடன் உள்ளனர். தற்போது போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வரும் நிலையில் தொடர்ந்து பணியில் உள்ள எங்களுக்கு விடுமுறை அளிக்க மாவட்ட எஸ்பி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : vacation , Give the holidays, cops, leeway
× RELATED சட்டப்பிரிவு 370 ரத்து வழக்கு கோடை...