1) இந்தி பிங்க் படம், தமிழில் நேர்கொண்ட பார்வை ஆனது. தெலுங்கில் வக்கீல் சாப் பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் பவன் கல்யாண், அஞ்சலி, நிவேதா தாமஸ் நடிக்கின்றனர். வித்யா பாலனின் கேரக்டரில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.
2) ஏற்கனவே ஐதராபாத்தில் மூன்று உடற்பயிற்சிக்கூடங்கள் நடத்தி வரும் ரகுல் பிரீத் சிங், இப்போது உணவகம் தொடங்கியுள்ளார். விரைவில் சென்னையில் தொடங்குகிறார்.
3) சூது கவ்வும், எக்ஸ், காதலும் கடந்து போகும் ஆகிய படங்களை இயக்கிய நலன் குமரசாமி, அடுத்து இரு படங்கள் இயக்குகிறார். அதில், சூது கவ்வும் 2ம் பாகம் ஒன்று.
4) நேர்கொண்ட பார்வையில் பாடல்கள் இல்லை என்று அஜித் குமார் ரசிகர்கள் வருத்தப் பட்டதால், இப்போது வலிமை படத்தில் 5 பாடல்ள் இடம்பெற செய்துள்ளாராம் இயக்குனர் எச்.வினோத். யுவன்சங்கர்ராஜா இசை அமைக்கிறார்.
5) விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் ஒரு குறும்படம் இயக்கி இருப்பதை தொடர்ந்து, விரைவில் முன்னணி ஹீரோவை வைத்து திரைப்படம் இயக்க முடிவு செய்துள்ளாராம். ஹீரோ யார் என்பதை தனது தாத்தா எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் மட்டும் சொல்லி இருக்கிறாராம்.
6) பொன்னியின் செல்வன் படத்தின் 2 பாகங்களை இயக்கி வெளியீடு செய்த பிறகு, மீண்டும் நேரடி இந்திப் படம் இயக்குவதாக சொல்லி இருக்
கிறார் மணிரத்னம். இதன் ஹீரோ முடிவாகவில்லையாம்.
7) இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் 2ம் பாகம் படத்தில் நடிக்க மறுத்ததாக வந்த தகவலை மறுத்துள்ள யாஷிகா ஆனந்த், அந்த படத்துக்கு கேட்ட கால்ஷீட் அப்போது தன்னிடம் இல்லாததாலேயே நடிக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
8) வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில், 2வது ஹீரோயினாக நடித்து வருகிறார் அஞ்சனா கீர்த்தி. ஹீரோயினாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்
கிறார். இருவருக்கும் சமமான முக்கியத்துவம் இருக்குமாம்.
9) மலையாள சீனியர் நடிகர் மம்முக்கோயா, விக்ரமின் கோப்ரா என்ற படத்தின் மூலமாக தமிழுக்கு வருகிறார். மேலும், மலையாள படவுலகை சேர்ந்த மியா ஜார்ஜ், ரோஷன் மேத்யூ,சர்ஜானோ போன்றோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
10) ராஷ்மிகா மந்தனா மீது தனக்கு ஈர்ப்பு இருப்பதாக ஹரீஷ் கல்யாண் சொன்னார். அதைவிட ஒரு படி மேலே சென்ற ரைசா வில்சன், தனக்கு ஹரீஷ் கல்யாணை திருமணம் செய்துகொள்ள விருப்பம் இருப்பதாக காமெடியாக கூறியுள்ளார்.
11) விதார்த் ஜோடியாக ஒரு கிடாயின் கருணை மனு படத்தில் நடித்த டப்பிங் கலைஞர் ரவீணா ரவி, மாஸ்டர் படத்தில் விஜய் ஜோடியாக நடித்துள்ள மாளவிகா மோகனுக்கு டப்பிங் பேசியுள்ளார்.
12) விரைவில் படம் இயக்க திட்டமிட்டுள்ள நித்யா மேனன், அப்படத்தின் திரைக்கதையை அமைக்கும் பணியை இயக்குனர் மிஷ்கினிடம் வழங்கி இருக்கிறார்.