சென்னை: சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் 1000 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நலத்திட்ட உதவிகளை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ ஏற்பாட்டில் சைதாப்பேட்டையில் 1000 தொ.மு.ச. ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில் தி.மு.க இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 1000 தொ.மு.ச. ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் எம்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.குணசேகரன், சைதை மா.அன்பரசன், வழக்கறிஞர் எம்.தரன், ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, கோ.மதிவாணன், சேகர், எஸ்.பி.கோதண்டம், எம்.நாகா, தா.மோகன்குமார்,மு.ராசா, க.மணி, ஆர்.ராஜ்குமார், நேரு நகர் எஸ்.பாட்சா, எஸ்.ஆர். செந்தில், ஆர்.கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.