சென்னை: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று தனது டிவிட்டர் பதிவு: ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் 20ம்தேதி முதல் சுங்கக் கட்டணம் மீண்டும் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தற்போதைய நெருக்கடியான சூழலில் தற்போதைய உத்தரவை ரத்து செய்வதோடு நாடு முழுவதும் இயல்பு நிலை திரும்புகிற வரை மத்திய அரசு சுங்க கட்டண வசூலை நிறுத்தி வைக்க வேண்டும்.