×

போலீசாருக்கு பயந்து ஓடியபோது 4வது மாடியிலிருந்து விழுந்தவர் பலி: கண்ணகி நகரில் சோகம்

துரைப்பாக்கம்: போலீசாருக்கு பயந்து ஓடிய வாலிபர் 4வது மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்த சம்பவம் துரைப்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் வீடுகளில் முடங்கியுள்ள மக்கள் தாயம், பல்லாங்குழி உள்ளிட்ட பழங்கால விளையாட்டுகளை விளையாடி பொழுதை போக்குகின்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு துரைப்பாக்கம் அடுத்த கண்ணகி நகர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பின் 4வது மாடியில் இளைஞர்கள் சிலர் சூதாட்டம் ஆடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். போலீசார் வருவதை பார்த்து மாடியில் இருந்த அனைவரும் ஓட்டம் பிடித்தனர்.

அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (38) என்பவர், எதிர்பாராத விதமாக 4வது மாடியில் இருந்து கீழே தவறி விழுந்தார். பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக இறந்தார். போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : policeman ,city ,Kannaki , Falling ,4th floor ,police frightened ,tragedy, Kannaki city
× RELATED சினிமா ஸ்டண்ட் நடிகர் வீட்டில் திருட்டு