சென்னை: சென்னையில் 4 பெண் இன்ஸ்பெக்டர்களை பணியிடமாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: சென்னை சிஎம்பிடி குற்றப்பிரிவில் இருந்த லதா, ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்த சோபராணி திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், ஜாம்பஜார் குற்றப்பிரிவில் இருந்த கவுசல்யா, பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவுக்கும், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்த விஜயலட்சமி சிஎம்பிடி குற்றப்பிரிவுக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.