மதுரை: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் 17,854 அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர் என மதுரையில் வைரஸ் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்த பின் அமைச்சர் உதயகுமார் பேட்டியளித்தார். கட்டுப்பாட்டு அறை மூலம் மக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது என கூறினார். மதுரை கொரோனா கட்டுப்பாட்டு அறைக்கு 2,199 அழைப்புகள் வந்துள்ளன எனவும் தெரிவித்தார்.