சேலம்: சேலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி கோயிலில் தமிழ் புத்தாண்டன்று பூஜை நடத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரினையடுத்து, ராஜகணபதி கோயில் அர்ச்சகர்கள், ஐயப்பன் மற்றும் கோயில் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அர்ச்சகர்கள் உள்பட கோயில் நிர்வாகிகள் 18 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.