×

உ.பி.யில் பொருளாதாரத்தை மேம்படுத்த சிறப்புக் குழு பிரியங்கா கோரிக்கை

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் குறுவை அறுவடையை கொள்முதல் செய்ய விவசாயிகளுக்கு உறுதி அளிக்க வேண்டும், கரும்பு விவசாயிகளின் நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். அறுவடை இயந்திரங்கள் உட்பட விவசாய இயந்திங்களை பயன்படுத்துவதற்கான நிபந்தனையை தளர்த்த வேண்டும், பதிவு செய்யாத தொழிலாளர்களுக்கும் இலவச ரேஷன் வழங்க வேண்டும், உ.பி.யில் பொருளாதாரத்தை மேம்படுத்த சிறப்பு குழு அமைக்க வேண்டும், கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவார உதவிகள் அளிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.



Tags : Priyanka ,committee ,UP Priyanka , Priyanka ,economy ,Uttar Pradesh
× RELATED விலைவாசி உயர்வால் மக்கள் அவதி: பிரியங்கா தாக்கு