×

நிவாரணம் தொடர்பாக திமுக வழக்கின் உத்தரவு: வைகோ மனுவுக்கும் பொருந்தும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அரசியல் கட்சிகள் நிவாரணம் வழங்க விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, திமுக தொடர்ந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு வைகோ தொடர்ந்த வழக்கிற்கும் பொருந்தும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏழை மக்களுக்கு உணவு மற்றும் மளிகை பொருட்களை நேரடியாக வழங்க  அரசியல் கட்சிகளுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தாக்கல் செய்த வழக்கு, நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான  வைகோ,   திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவில், உணவுப்பொருட்களை நேரடியாக வழங்க மூன்று பேருக்கு மட்டும் அனுமதி என்று கூறப்பட்டிருந்தது.

3 பேரால் நிவாரணத்தை குறுகிய காலத்தில் வழங்க முடியாது. எனவே, நிவாரணம் மற்றும் உணவு வழங்கும் நேரத்தை  மாலை 4 மணி வரை நீட்டிக்க வேண்டும் என்றும் வாதிட்டார். இதற்கு ஆட்சேபம் தெரிவித்த அரசு தரப்பு வக்கீல், உணவு வழங்க 3 பேருக்கு மேல் அனுமதிப்பது என்பது 144 தடை உத்தரவுக்கு எதிரானது என்றார்.
 வழக்கை விசாரித்த நீதிபதிகள், குறிப்பிட்ட நேரத்திற்குள் உணவு வழங்க இயலாவிட்டால் கூடுதலாக 2 மணி நேரம் அனுமதிப்பது குறித்து அதிகாரிகள் முடிவு செய்யலாம் என்று திமுக தொடர்ந்த வழக்கில் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளோம். திமுக தொடர்ந்த வழக்கில் பிறப்பித்த உத்தரவு இந்த வழக்கிற்கும் பொருந்தும் எனக் கூறி வைகோ தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தனர்.


Tags : DMK ,Vaiko , DMK case, Vaiko, HC
× RELATED மோ(ச)டி வித்தை தமிழ்நாட்டில் எடுபடாது: வைகோ பேச்சு