×

ஆடு, மாடு மேய்ப்போருக்கு 5 ஆயிரம் வழங்க முதல்வருக்கு கோரிக்கை

சென்னை: ஊரடங்கால் பாதிக்கப்பட்டு இருக்கும் ஆடு, மாடு மேய்ப்போருக்கு 5 ஆயிரம் நிவாரணம் வழங்க, தமிழ்நாடு யாதவ மகாசபை பொதுச்செயலாளர் சுப.சிவபெருமாள் முதல்வருக்கு அனுப்பியுள்ள கடித கடிதத்தில் கூறியிருப்பதாவது:  தமிழகத்தில் ஏறத்தாழ மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஆடு, மாடு மேய்ப்பதையே தங்கள் குல தொழிலாகக்கொண்டு வாழ்ந்து வருகின்றனர். தற்போது ஊரடங்கு உத்தரவினால் சந்தைகள் கூடாததால் வாழ்க்கை நிலை மிகவும் பாதிக்கப்பட்டு துன்பத்தில் தள்ளப்பட்டுள்ளனர். வாழ்வாதாரமான ஆடு, மாடுகளும் பலியாகும் பரிதாப நிலை உள்ளது. எனவே குடும்பங்களையும், ஆடு, மாடுகளையும் காப்பாற்றி உதவ குடும்பத்திற்கு ₹5 ஆயிரம் வழங்க வேண்டும்.  



Tags : Goat, Cow, Chief, Corona
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...