அருப்புக்கோட்டை: உலக மக்கள் கொரோனா தொற்றிலிருந்து விடுபட அருப்புக்கோட்டையைச் சேர்ந்த யோகா பயிற்றுநர் ஆணி படுக்கையின் மேல் தினமும் 90 நிமிடம் யோகா மூலம் பிரார்த்தனை செய்கிறார். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் யோகா பயிற்றுநர் ராஜகோபால். உலக மக்கள் அனைவரும் கொரோனா தொற்றிலிருந்து விடுபட வேண்டி தினமும் 90 நிமிடங்கள் ஆணி படுக்கையின் மேல் அமர்ந்து உத்தன தண்டாசனம், உத்தனபாத தவிராசனம், உத்தனபாத கோகிலவாம தேவாசனம், உத்தமபாத அர்த்த யோகராஜக போட்டாசனம் ஆகியவற்றை செய்கின்றார்.
கடந்த 24 நாட்களாக தொடர்ந்து செய்து வருகிறார். கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க தொண்டை தொற்று, நுரையீரல் தொற்று குணப்படுத்தக்கூடிய பல ஆசனங்களை பொதுமக்களுக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி அவரவர் வீட்டில் தனிமையில் செய்ய ராஜகோபால் ஏற்பாடு செய்துள்ளார்.