×

மக்களை காக்கவோ, பொருளாதாரத்தை மீட்கவோ எந்த ஒரு திட்டமும் மத்தியஅரசிடம் இல்லை: திருமாவளவன் அறிக்கை

சென்னை: மக்களை காக்கவோ, பொருளாதாரத்தை மீட்பதற்கான எந்த ஒரு திட்டமும் மத்திய அரசிடம் இல்லை என்று திருமாவளவன் கூறியுள்ளார்.  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:  நாடு முழுவதும் 2ம் கட்ட முழு அடைப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் புதிய வழிகாட்டும் நெறிமுறைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அவற்றில் மக்களுக்கான நிவாரணம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் இல்லை.    கொரோனா நோய்த்தொற்றுச் சூழலை தனது அதிகார குவிப்புக்கும், சுயவிளம்பரத்துக்கும், வாய்ச்சவடால்களுக்கும் மட்டுமே மத்திய பாஜ அரசு பயன்படுத்தி வருகிறது.

மக்களைக் காப்பதற்கோ, பொருளாதாரத்தை மீட்பதற்கோ எந்தவொரு திட்டமும் அதனிடம் இல்லை. உருப்படியான ஆலோசனைகளை கூறக்கூடிய அதிகாரிகளையும் மோடி அரசு வைத்திருக்கவில்லை.  இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : government ,Thirumavalavan , People, Economy, Thirumavalavan, Corona
× RELATED பாசிச கும்பலிடமிருந்து நாட்டை மீட்க உறுதியேற்போம்: திருமாவளவன் அறிக்கை